சுற்றுலா கப்பலில் ஹண்டாவைரஸ் (Hantavirus) பரவல்: 3 கனடியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
சுற்றுலா கப்பல் ஒன்றில் ஏற்பட்ட ஹண்டாவைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து, எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு மூவர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO) தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை பதிவான எட்டு வழக்குகளில் ஐந்து பேருக்கு ஹண்டாவைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. ‘எம்.வி. ஹொண்டியஸ்’ (MV Hondius) என்ற அந்தச் சுற்றுலா கப்பலில் இருந்து மற்ற பயணிகள் இறங்குவதற்கான திட்டங்களை அதிகாரிகள் வகுத்து வருகின்றனர். […]








