Some Populer Post

  • Home  
  • ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாகப் பதிவிட்ட கியூபெக் நபர் தேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது!
- Canada

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாகப் பதிவிட்ட கியூபெக் நபர் தேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது!

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவான கருத்துக்கள் மற்றும் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ், கனடாவின் கியூபெக் (Québec) மாகாணத்தைச் சேர்ந்த நபரொருவர் அந்நாட்டுத் தேசிய பாதுகாப்புப் பிரிவின் விசேட புலனாய்வு விசாரணைகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோயல் கனடிய மவுண்டெட் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர். கியூபெக்கின் லேவிஸ் (Lévis) பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகமது அலி பென் சாவா (Mohamed Ali Ben Chaoua) என்ற நபரே இவ்வாறு ஆர்.சி.எம்.பி (RCMP) […]

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவான கருத்துக்கள் மற்றும் காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ், கனடாவின் கியூபெக் (Québec) மாகாணத்தைச் சேர்ந்த நபரொருவர் அந்நாட்டுத் தேசிய பாதுகாப்புப் பிரிவின் விசேட புலனாய்வு விசாரணைகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோயல் கனடிய மவுண்டெட் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர்.

கியூபெக்கின் லேவிஸ் (Lévis) பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகமது அலி பென் சாவா (Mohamed Ali Ben Chaoua) என்ற நபரே இவ்வாறு ஆர்.சி.எம்.பி (RCMP) எனப்படும் கனடிய மத்திய கூட்டாட்சிப் பொலிஸ் பிரிவின் கிழக்கு பிராந்திய உத்தியோகத்தர்களால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற புலனாய்வு அச்சம் வலுவடைந்ததை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆர்.சி.எம்.பி வங்கியின் ‘தேசிய பாதுகாப்பு தகவல் வலைப்பின்னலுக்கு’ (National Security Information Network) இணையவழியாகக் கிடைத்த ரகசியப் புகார் ஒன்றின் அடிப்படையிலேயே இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினரின் முதற்கட்ட தகவல்களின்படி, சந்தேகநபரான பென் சாவா, ‘டிக்ரொக்’ (TikTok) சமூக ஊடகத் தளத்தில் ஐஎஸ்ஐஎஸ் (Islamic State) பயங்கரவாத அமைப்பிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெருமளவிலான காணொளிகளையும் செய்திகளையும் பதிவிட்டு வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப் பின்னணியில், கனடிய குற்றவியல் சட்டக்கோவையின் 810.011 ஆம் பிரிவின் கீழ், சந்தேகநபருக்கு எதிராகப் ‘பயங்கரவாத அமைதிப் பிணை ஆணை’ (Terrorism peace bond) ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்குப் பொலிஸார் தற்போது நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இச் சட்டப்பிரிவின் மூலம், சாத்தியமான பயங்கரவாதச் செயல்பாடுகளை முன்கூட்டியே தடுக்கும் நோக்கில், சந்தேகநபரின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்கும் இதர கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் பாதுகாப்புப் பிரிவினருக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் கிடைக்கும்.

இவ் விவகாரம் தொடர்பான தேசிய பாதுகாப்புப் புலனாய்வு விசாரணைகள் தற்போதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட சான்றுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபருக்கு எதிராக மேலும் பல மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.சி.எம்.பி (RCMP) தெரிவித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பென் சாவா, வெள்ளிக்கிழமை கியூபெக் நகர் நீதிமன்றத்தில் (Québec City courthouse) ஆஜர்படுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Empath  @2024. All Rights Reserved.